திருச்சியில் சிறுத்தை நடமாட்டம்? - வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு.

திருச்சியில் சிறுத்தை நடமாட்டம்? - வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பச்சைமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சோபனபுரத்தை அடுத்துள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் வனசாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் அந்த வனச்சாலையில் தடுப்புச் சுவரில் சிறுத்தை ஒன்று படுத்திருந்தார் வாகன ஓட்டி தனது செல்போனில் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளதாகவும், அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் டாப் செங்காட்டுப்பட்டி வனச்சாலையில் சோதனை மற்றும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சமூக விரோதிகள் தேவையின்றி வதந்தியை பரப்பியுள்ளனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision