கோவில் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது - ஶ்ரீரங்கத்தில் தெலுங்கானா முதலமைச்சர் பேட்டி

கோவில் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது - ஶ்ரீரங்கத்தில் தெலுங்கானா முதலமைச்சர் பேட்டி

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர் .

பின்னர் கோவிலுக்குள் சென்ற தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்த பின்னர் தாயார் சன்னதிக்கு சென்ற அவர் அங்கு தரிசனம் செய்து முடித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்... ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2வது முறை வருகிறேன். ஸ்ரீரங்கம் கோவில் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு நன்றி. நாளை சென்னையில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் அப்போது  அரசியல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகிறேன் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn