போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்க முயன்ற பெண் கைது

போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்க முயன்ற பெண் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வள்ளி. இவரது பெயரில் எலந்தப்பட்டியை பகுதியில் சர்வே எண் 350 வீட்டுமனை உள்ளது. அந்த இடத்தை சென்னை பல்லாவரம் இந்திரா நகர் பொலிச்சல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்.

இவரது மனைவி பாப்பா (36) என்பவர் போலியாக ஆதார் கார்டு தயார் செய்து விற்பதற்காக திருவெறும்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் டோக்கன் பெற்று பத்திரப்பதிவு செய்ய முயன்றார். அப்பொழுது அவரது பெயர் மாற்றி வந்ததால் பாப்பா போலியாக ஆவணம் தயாரித்து மற்றொருவர் இடத்தை விற்க முயன்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு அலுவலர் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பின்னர் திருவெறும்பூர் போலீசார் பாப்பாவை கைது செய்தனர். இந்த நிலையில் பாப்பாவுடன் வந்த பாப்பா கணவர் சதீஷ்குமார் மற்றும் சிலர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision