பல கொலைகள், பொதுமக்களிடம் கத்தியை காண்பித்து கொள்ளையடித்த திருவெறும்பூரை சேர்ந்த ரவுடி கைது

பல கொலைகள், பொதுமக்களிடம் கத்தியை காண்பித்து கொள்ளையடித்த திருவெறும்பூரை சேர்ந்த ரவுடி கைது

திருச்சி மாநகரத்தில் உறையூர் காவல்நிலைய எல்லையில் திருவெறும்பூர் காவல்நிலைய ரவுடியான கொம்பன் ஜெகன் (28) என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தி பட்டா கத்தியை காண்பித்து பணபறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதாக
கிடைத்த தகவலின்பேரில் வாகன தணிக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த மேற்படி ரவுடியை பிடித்து விசாரித்தபோது சாலைரோடு கற்பகம் டீ கடை அருகே நடந்த சென்றவரிடம் 
பட்டா கத்தியை காண்பித்து மிரட்டி பணத்தை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும் கடந்த 23.05.22-ந்தேதி கோட்டை காவல்நிலைய மேலசிந்தாமணி பகுதியில் செல்போன் கடை வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதும், 28.04.22-ந்தேதி உறையூர் காவல்நிலைய எல்லையில் மாவு மில் நடத்தி வரும் வியாபாரி ஒருவரை பணத்திற்காக கடத்த முயற்சி செய்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் மேற்படி எதிரியான கொம்பன் ஜெகதீசன் (28), என்பவர் மீது திருச்சி, திருவண்ணாமலை, சேலம் போன்ற இடங்களில் கொலை வழக்கும், மூன்று கொலை முயற்சி வழக்கும், பல்வேறு காவல்நிலையங்களில் கத்தியை காண்பித்து பொதுமக்களிடம் பணம் பறித்து சென்றதாக 12 வழக்குகளில் 
ஈடுபட்டுள்ளதாக தெரியவந்ததன்

இதன் பேரில் மேற்படி எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ரவுடியை கைது செய்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும் பொதுமக்களிடம் கத்தியை காண்பித்து அச்சுறுத்தி பணத்தை பறித்தும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை 
மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO