திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்பனை - 16 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்பனை - 16 பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 670 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. 

இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பணம், துண்டு சீட்டில் எழுதிய லாட்டரி எண்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகரில் காவல்துறையின் நடத்திய அதிரடி வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision