திருச்சியில் 8 கொலை செய்த சப்பாணி

திருச்சியில் 8 கொலை செய்த சப்பாணி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இவரது நண்பரான வேங்கூரைச் சேர்ந்த தங்கதுரை மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தேக்கின் விஜய் விக்டர் உள்பட 8 பேரை பணம், நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்து புதைத்தார். 

இது குறித்து திருவரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சப்பாணியை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்தவர்களின் உடல்களை கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைத்தது தெரியவந்தது. சப்பாணி ஒவ்வொருவரிடம் நட்பாக பேசி அவர்கள் தனியாக அழைத்துச் சென்று யாரும் பார்க்காத நேரத்தில் இந்த கொடூர கொலைகளை அரங்கேற்றியது தெரிய வந்தது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனை அடுத்து சப்பாணியை அழைத்து சென்ற போலீசார் கொலை செய்து புதைக்கப்பட்டவர்களின் உடல்களை தோண்டி எடுத்து அதே இடத்திலேயே மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அந்த உடல்கள் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டன. இந்த வழக்கு திருச்சி மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சப்பாணியை திருச்சி மத்திய சிறையில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். ஆனால் நீதிபதி கே.பாபு வழக்கின் தீர்ப்பை வருகிற ஏழாம் தேதிக்கு மாற்றி வைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision