சென்னைக்கு 1கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

சென்னைக்கு 1கோடி மதிப்பிலான  நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 8 லாரிகள் மூலம் சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது...... சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் துரித நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.

 நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பால் பவுடர் பாக்கெட்டுகள், ரஸ்க், சேமியா, பிரட், டூத் பிரஸ், பேஸ்ட், சோப்புகள், உணவுபொருட்கள், குடிநீர் பாட்டில்கள், பாய்கள், துணிமணிகள், போர்வைகள், எவர் சில்வர் தட்டுகள், நாப்கின்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரூ. 1கோடி மதிப்பில் 8 வாகனங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision