தாயின் இறுதி சடங்குக்காக வந்த மகன் மர்மமான முறையில் இறப்பு

தாயின் இறுதி சடங்குக்காக வந்த மகன் மர்மமான முறையில் இறப்பு

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் சிவனேசன், இவரது மனைவி ரஞ்சிதம். இவர் கடந்த சனிக்கிழமை உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் ரஞ்சிதத்தின்  இறப்பிற்கு இறுதி சடங்கு செய்வதற்கு பெங்களூரில் வசித்து வரும் அவரது மகன் வேல்முருகன் (38) வந்துள்ளார்.

இறுதி சடங்குகளை முடித்து விட்டு பெங்களுர் செல்லாமல் தாயின் வீட்டிலேயே தங்கி உள்ளார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் நவல்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீசார் கதவு உள் தாழ்பாள் இட்டு உள்ளதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வேல்முருகன் படுக்கையில் இருந்தவாறு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF