திருச்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

திருச்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

நாட்டின் 73வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் வண்ண பலூன்களை பறக்க விட்டு, 130 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கி ஆட்சியர் கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து அரசு துறையில் பணிபுரிந்த 489 அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நற்சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் பதக்கம், சான்றிதழ் பெறுபவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழக்கமான உற்சாகமின்றி கலை நிகழ்ச்சிகள்யில்லாமல் குடியரசு தின விழா கொண்டாட்டம் ஒரு மணி நேரத்தில் நிறைவடைந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn