நீ யாரா வேணாலும் இருந்துட்டு போ போலீசாரை எச்சரித்த போதை வாலிபர் நடுரோட்டில் தர்ணா

நீ யாரா வேணாலும் இருந்துட்டு போ போலீசாரை எச்சரித்த போதை வாலிபர் நடுரோட்டில் தர்ணா

திருச்சி நீதிமன்றம் அருகில் வாலிபர் ஒருவர் மது போதை மற்றொருவரிடம் சண்டையிட்டு கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் போதை வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அந்த வாலிபரை அருகிலிருந்த சென்ஸ் கோர்ட் காவல்நிலைத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசாரிடம் நான் என்ன கொலைகாரனா என கூறி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை வாலிபர் தனது சட்டையை கழற்றி திடீரென காவல்நிலையம் முன்பு சாலை தர்ணா செய்தனர்.

பின்னர் சமாதானம் செய்த போலீசாரை நீ யாரா வேணாலும் இருந்துட்டு போ போலீசாரை எச்சரித்து தொடர்ந்து வாக்குவாதம் செய்த போதை வாலிபரை ஒருவழியாக சமதானம் செய்த போலீசார் அவரிடம் முகவரி பெற்று கொண்டு அனுப்பி வைத்தனர். பின்னர் மறுநாள் அந்த போதை வாலிபருக்கு சிறப்பு கவனிப்பு தான்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF