திருச்சியில் பல்வேறு இடங்களில் பக்ரீத் திருநாள் சிறப்புத்தொழுகை

இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடுஇணையற்ற தியாகத்தை நினைவூட்டும் நாளான பக்ரீத் திருநாள் சிறப்புத்தொழுகை திருச்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி பீமநகர் தவ்ஹீத் திடலில் யுனிவர்சaல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் மாநிலத்தலைவர் ரபீக் தலைமையில் சிறப்புதொழுகை நடைபெற்றது. இந்த கூட்டுத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று துவா செய்தனர்.
இதேபோன்று சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மற்றும் அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இதேபோன்று உழவர்சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு திடல்தொழுகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision