செத்தானுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

செத்தானுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செத்தான் (55). முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த (23.07.2020) அன்று அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாத மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 பின்னர் போலீசார் செத்தானை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மகிளா நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவுற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட செத்தானுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision