திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

வரும் (16.01.2024) (செவ்வாய்கிழமை) அன்று திருவள்ளுவர் தினம் (25.01.2024) (வியாழன் கிழமை) அன்று வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் மற்றும் (26.01.2024) (வெள்ளி கிழமை) அன்று குடியரசு தினம் மேற்படி தினங்களை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FL3AA & FL 11அனைத்தும் மூடப்படும்.

(16.01.2024) (செவ்வாய் கிழமை) அன்று திருவள்ளுவர் தினம் 25.01.2024 (வியாழன் கிழமை) அன்று வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் மற்றும் (26.01.2024) (வெள்ளி கிழமை) அன்று குடியரசு தினம்மேற்படி தினங்களை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும்,

 (FL1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL 11வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

 மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision