குடியிருப்பு பகுதியில் வழிந்தோடும் பாதாளசாக்கடை... நோய்பரவும் அச்சத்தில் பொதுமக்கள்...

குடியிருப்பு பகுதியில் வழிந்தோடும் பாதாளசாக்கடை... நோய்பரவும் அச்சத்தில் பொதுமக்கள்...

திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகர்  பகுதி3 குடியிருப்பு பகுதியில்  கடந்த ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை நீர் வழிந்தோடுகிறது.  இதனால் சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரை நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision