திருச்சியில் இருந்து இலங்கை செல்கிறார் சாந்தன்

திருச்சியில் இருந்து இலங்கை செல்கிறார் சாந்தன்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் முருகன், ராபர்ட்பயஸ், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் இலங்கையை சேர்ந்தவர்களான சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சி மத்திய சிறையில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்து தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நான்கு பேரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் நோய்வாய்ப்பட்டு இருக்கும் தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்று சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கி உள்ளதாகவும், அந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இதுவரை தங்களுக்கு எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்றும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அவரை இலங்கைக்கான போவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அனுமதி அளித்து மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சாந்தன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் அவரை சென்னையில் இருந்து விமான மூலம் இலங்கை அனுப்பலாமா? அல்லது திருச்சிக்கு அழைத்து வந்து திருச்சியில் இருந்து விமான மூலம் அனுப்பலாமா? என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும நிலையில், திங்கள் அல்லது செவ்வாய்கிழமை இலங்கை புறப்படுவார் என தகவல்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision