மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண பொருட்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்கள்

மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண பொருட்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்கள்

மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேச கரம் நீட்டும் வகையில்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ராமதாஸ் மற்றும் செந்தில் ஆகியோருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் சுமார் 24 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் ஒப்படைத்தனர்.

துறையூர் ஊராட்சியில் 34 ஊராட்சி மன்றங்கள் அமைந்துள்ளன. அதில் சுமார் 8 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களன செல்லிபாளையம் அரவிந்த், மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, சேனப்பநல்லூர் தலைவர் ராமதாஸ், கீரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், வண்ணாடு ஊராட்சி மன்ற தலைவி சரோஜா, 

வீரமச்சான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், சொக்கநாதபும் மதுராபுரி ஊராட்சி மன்ற தலைவி தனலட்சுமி, நடுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision