கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி. 

கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி. 

கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி. 

தமிழக சட்டமன்ற தேர்தல் - 2021 அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் ரங்கோலி கோலப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 50 மாணவிகள் பங்கேற்று 25 ரங்கோலி விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர். இப்போட்டியில் வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், உங்கள் ஓட்டு உங்கள் உரிமை, வாக்களார்கள் பணமாகவோ, பொருளாகவோ வாங்காமல் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்களோடு வரையப்பட்ட ரங்கோலி கோலங்கள்  இடம்பெற்றது. முன்னதாக இப்போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியரும்,  தேர்தல் அதிகாரியுமான சிவராசு தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.