மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த ரூ.33 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த ரூ.33 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலன்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியது. இதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் தனது மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.33 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 462 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision