காவிரி ஆற்றில் மூழ்கிய தாய், மகள் சடலமாக மீட்பு

காவிரி ஆற்றில் மூழ்கிய தாய், மகள் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் சிறுகமணி பகுதியைச் சேர்ந்தவர் தாய் மகேஸ்வரி (28 ), மகள் கனிஷ்கா (8). இருவரும் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பெட்டவாய்தலை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கண்டோண்மென்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு காவிரி ஆற்றில் மூழ்கிய தாய் மற்றும் மகளை தேடினர். தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து சரவணன் தீயணைப்போர் அருணாச்சலம், ஆனந்த் மற்றும் பொதுமக்கள் உதவியோடு நீண்ட தேடுதலுக்கு பின் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

பின்னர் பெட்டவாய்த்தலை காவல் உதவி ஆய்வாளர்  பொன்னுசாமியிடம் இறந்தவர்களின் உடல் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை க்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO