திருச்சி கோவிலில் வெள்ளி கவசம், தாலி திருட்டு

திருச்சி கோவிலில் வெள்ளி கவசம், தாலி திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த முருங்கப்பட்டியில் கொங்கு மகா மாரியம்மன் கோவில் தம்மம்பட்டி மெயின் ரோட்டில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி ராஜேந்திரன் (57) ( பண்டாரம்) இந்த கோவிலை இரவு 09:30 மணிக்கு பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் மறுநாள் காலை 05:30 மணிக்கு வந்து பார்த்தபோது கோவிலின் முன்புறம் உள்ள இரும்பு கதவு உடைக்கப்படும், கருவறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 6 1/2 கிலோ வெள்ளி கவசம், 1/2 பவுன் தாலி மற்றும் உண்டியல் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்து வந்த துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn