திருச்சியில் ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சியில் ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

2023-ம் ஆண்டு பிப்ரவரி 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL1) மூடப்பட்டிருக்கும்.

அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL 11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn