திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்தவர் உயிரிழப்பு

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்தவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்த மேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 679 காளைகள் பங்கேற்றது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை முருகன் (54) என்ற பார்வையாளரை மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.

உடனடியாக மணப்பாறையிலிருந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்வர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 25 பேர் காயமுற்றனர். இதில் 8 மாட்டின் உரிமையாளர், 11 மாடுபிடி வீரர்கள், 5 பார்வையாளர்கள்.

இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn