பொதுத்தேர்வு கண்காணிப்பு ஆய்வு அலுவலர்களுக்கான சிறப்பு கூட்டம்

பொதுத்தேர்வு கண்காணிப்பு ஆய்வு அலுவலர்களுக்கான சிறப்பு கூட்டம்

(2023-2024) ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மார்ச் /ஏப்ரல் 10 ஆம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான பொது தேர்வுகள் நடத்துவது தொடர்பாக கண்காணிப்பு ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டம் திருச்சி சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தலைமையில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர், கண்ணப்பன்  தனியார் பள்ளிகள் இயக்குநர்  டாக்டர் நாகராஜன் முருகன்  மற்றும் பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்களுக்கு கடந்த காலங்களைப் போலவே தேர்வு பணிகளில் எந்தவித புகாருக்கும் இடமின்றி சிறப்பாக நடத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் நிறைவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கலந்து கொண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision