ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், ஸ்ரீ பூலோகம் வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில். இங்கு தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநில, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகை தருவதுண்டு.

அந்த வகையில் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று (24.04.2024) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது.

இதில் ரூபாய் 70,03,170 ரொக்கமும், 155 கிராம் தங்கம், 775 கிராம் வெள்ளி மற்றும் 280 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் இருந்தன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision