மாநில அளவிலான கபடி போட்டி

மாநில அளவிலான கபடி போட்டி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காட்டூர் தென்னவர் கபடி குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் போட்டியை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். மாநில அளவிலான கபாடி போட்டியில் மொத்தம் 98 அணிகள் பங்கு பெற்றன.வெற்றி பெற்ற அணிகள்.1. கட்டக்குடி திருவாரூர்,2. St.joshep's கல்லூரி சென்னை,3. டால்பின் திருப்பூர்4. கல்கண்டார்கோட்டை திருச்சி ஆகியோர்.

போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.60 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn