திருச்சி மாவட்டத்தில் 5 நாட்கள் டாஸ்மாக் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் 5 நாட்கள் டாஸ்மாக் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், FL2 முதல் FL 11 பார்கள் (FL-6 நீங்கலாக) அனைத்தும் (17.04.2024) அன்று காலை 10:00 மணி முதல் (19.04.2024) (வாக்குபதிவு நாள்) இரவு 12:00 மணி வரை மற்றும் (21.04.2024) மகாவீர் ஜெயந்தி மற்றும் (01.05.2024) மே தினம் ஆகிய தினங்களில் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision