நவீன எரிவாயு தகன மேடை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

நவீன எரிவாயு தகன மேடை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியின் செயல்பாட்டு வந்த நவீன எரிவாயு தகன மேடை அவசர பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் தற்காலிகமாக உடல் தகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

பணிகள் முடிவடைந்த பிறகு தகனமேடை செயல்படும் என்பதை துறையூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக எரிவாயு தகன மேடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியாக தகனம் செய்யப்படாததை கண்டித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

இதன் தொடர்ச்சியாக தற்போது நகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொள்வதற்காக எரிவாயு தவன மேடையில் தகனம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision