திருச்சியில் பழமை வாய்ந்த தர்கா இடிப்பு -பதட்டம்

திருச்சியில் பழமை வாய்ந்த தர்கா இடிப்பு -பதட்டம்

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள வக் போர்டுக்கு சொந்தமான அன்னார் பாக் தர்காவை 194 செண்ட் நிலம். 400 சதுர அடியில் உள்ள தர்காவை நள்ளிரவில் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றியுள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து பஷீர் அகமது என்பவர் இந்த தர்காவை பராமரித்து வருகிறார். இந்நிலையில் அவர் இதனை இடித்த பத்துக்கு மேற்பட்டவர்கள் மீது தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக சம்பவ இடத்தில் வந்த தில்லை நகர் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உத்தரவாதம் அளித்தனர். அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மூன்று நபர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர். இதனால் தென்னர் உழவர் சந்தை பகுதியில் பெரும் பரபரப்பை காணப்பட்டது.

இந்த நில பிரச்சனை தொடர்பாக வக்ப்பு போர்டு நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தரப்பும் தங்களிடம் ஆவணங்கள் உள்ளது என கடும் வாக்குவாதம்  செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn