முதலமைச்சர் நாளை (17.02.2024) திருச்சியில் திறக்க உள்ள புதிய தீயணைப்பு நிலையம்
தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை சார்பில் திருச்சி திருவெறும்பூர் தீயணைப்பு - மீட்புப் பணிகள் நிலையம் திறப்பு விழா. நாளை (17.02.2024) சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர், பாலாஜிநகர், எண் : 9, முதல்தெருவில்
புதிய தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்கள். இவ்விழாவில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு : ஜெகதீஷ், மாவட்ட அலுவலர் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை, திருச்சி மாவட்டம்
அவசர உதவிக்கு - 101, 112