துரை வைக்கோவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பரப்புரை

துரை வைக்கோவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பரப்புரை

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மறுமலர்ச்சி திமுக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏப்ரல் 14 முதல்16 வரை 50 இடங்களில் தெருமுனை பரப்பரை கூட்டங்கள் நடத்தி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டுதுண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மணிகண்டம் ஒன்றியத்தில் செயலாளர் முருகன் தலைமையில் 20 இடங்களிலும் மேற்கு பகுதியில் செயலாளர்சுரேஷ் முத்துசாமி தலைமையில் 10 இடங்களிலும்அபிஷேகபுரம் பகுதியில் செயலாளர் அஞ்சுகம் தலைமையில் ஐந்து இடங்களிலும்திருவரங்கம்செயலாளர் பார்வதி தலைமையில் ஐந்து இடங்களிலும்கிழக்கு பகுதி செயலாளர் அபுதாஹிர் தலைமையில் 5 இடங்களிலும்பொன்மலை பகுதி செயலாளர் ராஜா தலைமையில் ஐந்து இடங்களிலும் அந்தநல்லூர் ஒன்றியத்தில் செயலாளர். ராஜாங்கம் தலைமையில் ஐந்து இடங்களிலும் ஏப்ரல் 16 வரை நடைபெறுகிறது.

இக்கூட்டங்களில் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா துணைச் செயலாளர் செல்வகுமார் பொருளாளர் சண்முகம் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார் ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட தலைவர் நடராஜா விவசாய சங்க தலைவர் சிவசூரியன் மாதர் சம்மேளன மாநகர தலைவர் ஆயிஷா தூய்மைப் பணி சங்க பொறுப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision