அரசன்குடி ஜல்லிக்கட்டு போட்டி 600 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் 22 பேர் காயம்

அரசன்குடி ஜல்லிக்கட்டு போட்டி 600 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் 22 பேர் காயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசன் குடியில் தில்லை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 2006ஆம் ஆண்டுக்கு முன்பு ஆண்டுதோறும் நடந்தது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி டிஆர்ஓ பழனிகுமார் தலைமையில் ஆர்டிஓ தவச்செல்வம், திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுபிடி வீரர்களும் திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 600 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்கிறது. முதலில் சங்கிலி ஆண்டவர் கோவில் மாடும் அதன்பிறகு வீசங்க நாடுகோவில் மாடும் அவிழ்த்து விடப்பட்டது. அதன்பிறகு முறையாக மாடுகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன .

மாலை 3 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கிராம கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை மருத்துவ இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு மதுபோதை வழங்கப்பட்டுள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா என்பதை சோதனை செய்தனர்.

நவல்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உடற் சோதனை மற்றும் மாடு பாய்ந்ததில் ஏற்படும் காயங்களுக்கான முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 112  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 22 பேர் காயம் அடைந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO