நாடாளுமன்ற தேர்தலில் போட்டி - விருப்ப மனு அளித்த அமைச்சர் மகன்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி - விருப்ப மனு அளித்த அமைச்சர் மகன்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மகன் கே.என்.அருண் நேரு சென்னையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விருப்ப மனுவை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வழங்கினார்.

அருகில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார் கதிரவன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், கே என் ரவிச்சந்திரன் உள்பட பலர் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision