40 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கபட்ட ஸ்ரீரங்கம் கோயிலின் பில்வ தீர்த்த குளம்

40 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கபட்ட ஸ்ரீரங்கம்  கோயிலின்  பில்வ தீர்த்த குளம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின்  நவ தீர்த்த குளங்களில் ஒன்றான பில்வ தீர்த்த குளம் (திருவானைக் கோயில் வெங்கடேஸ்வரா திரையரங்கம் பின்பு உள்ளது ) சுமார் 40 ஆண்டுகளாக மிகவும் சிதிலம்மடைந்த நிலையில் இருந்தது.

இதை கவனத்தில் கொண்ட ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அதை மிக விரைவாக அதை சீர் செய்தது , 27.03.2021 சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஆதிபிரமோட்சவம் பங்குனி 8ம் திருநாள் ஆன இன்று  ஸ்ரீநம்பெருமாளுக்கு புதிதாக சீர் செய்யபட்ட பில்வ தீர்த குளத்தில் தீர்தவாரி நடைபெற்றது .

இதில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர்  மாரிமுத்து , அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன் ,ரங்காச்சாரி , கவிதா ஜெகதீன் , அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

40 ஆண்டுகளுக்கு பிறகு தீர்தவாரியை கண்ட பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ந்து கோயில் நிர்வாகத்தை வெகுவாக பாரட்டிச் சென்றனர் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW