ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (06.11.2021) தொடங்குகிறது

ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (06.11.2021) தொடங்குகிறது

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் ஏழு நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி வருகிற 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வு டோலோஸ்தவம் என்று அழைக்கப்படுகிறது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். அங்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். 

பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை,காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 5.30மணி முதல் இரவு 8 மணி வரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision