சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணியை நேரில் ஆய்வு செய்த கவுன்சிலர்

சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணியை  நேரில் ஆய்வு செய்த கவுன்சிலர்

திருச்சி மாநகரில் நேற்றிரவு முதலே மாநகரின் பல்வேறு இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

திருச்சி கே.கே நகர் மெயின் ரோடு பகுதியில்தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை கவுன்சிலர் காஜாமலை விஜய் இன்று காலையிலேயே நேரில் ஆய்வு செய்தார்.

மழை நீர் வடிகால் அமைப்பை மேம்படுத்தி சிரமத்தை தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO