11 மணிக்கே கடை திறந்த பணியாளர் கைது.

11 மணிக்கே கடை திறந்த பணியாளர் கைது.

டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சேதுராம் பிள்ளை காலனியை சேர்ந்தவர் சரவணன் (38). இவர் தென்னூர் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மதியம் 12 மணியளவில் திறக்க வேண்டிய கடையை ஒரு மணி நேரத்திற்கு முன்பே (11 மணிக்கே) கடையை திறந்துள்ளார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தில்லைநகர் எஸ்ஐ சுரேஷ்குமார் அதிரடியாக சென்று சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision