வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் 37 வயதுடைய அசோக் என்பவரின் வீட்டில் உள்ள தண்ணி தொட்டியில் வழக்கம்போல் தண்ணி எடுக்கும்போது 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

புள்ளம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் புள்ளம்பாடி தீயணைப்பு துறையினர் 5 அடி நீளம் கொண்ட ராஜ நாகத்தை லாபகமாக பிடித்து தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பாரதி தலைமையில்

 ரமேஷ் குமார் பரணிதரன் அருள்ராஜ் பிரகாஷ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கொண்டு பாம்பை உயிருடன் லாபகமாக பிடித்து தச்சன்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn