முதல் நிலை காவலரை அருவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

முதல் நிலை காவலரை அருவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (29.06..2024)-ந் தேதி அதிகாலை 02:00 மணியளவில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி பாலம், கீழ சிந்தாமணி அருகில் கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலைய முதல்நிலை காவலர் ஒருவர் இரவு ரோந்து பணி செய்து கொண்டிருந்தபோது, சந்தேககத்திற்கிடமான முறையில் அங்கே நின்றுக்கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் இரவு ரோந்து காவலர் விசாரணை செய்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேக நபர் ஒருவர் தான் மறைந்து வைத்திருந்த அருவாளால் காவலரை வெட்டி கொலை முயற்சி செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்ததில், மேற்படி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சரவணகுமார் (எ) புலி சரவணன் (23), த.பெ.ஜெகநாதன் மற்றும் சாரதி (21), த.பெ.பார்த்திபன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி சரவணகுமார் (எ) புலி சரவணன் என்பவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் அடிதடியில் ஈடுப்பட்டது உட்பட மொத்தம் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

மேலும் எதிரிகள் சரவணகுமார் (எ) புலி சரவணன் மற்றும் சாரதி ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, மாநகர காவல் ஆணையர்ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision