சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 08.06.22-ம்தேதி திருச்சி பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும், வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்து எதிரிகள் 1) பிரகாஷ், பரத் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி பரத் என்பவர் மீது கடந்த 2021ம்ஆண்டு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரிகள் பிரகாஷ் மற்றும் பரத் ஆகியோர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm


#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO