திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகன உதிரிபாகங்களை திருடிய மூன்று பேர் கைது

திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகன உதிரிபாகங்களை திருடிய மூன்று பேர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரு சக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்துக்கொண்டிருந்தது. லாரியை சென்னையை சேர்ந்த சிவராஜா என்பவர் ஓட்டி வந்தார்‌.

திருச்சி மாவட்டம் சிறுவனூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிய லாரி ஓட்டுநர் எழுந்து பார்த்தபோது லாரியில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகன உதிரி பாகங்கள் அடங்கிய 50 பெட்டிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் தனிப்படை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கொளத்தூரை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்த ராமன் மகன் அருள்குமார், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேலு மகன் ஸ்ரீதரன் உள்ளிட்ட 3 பேர் இரு சக்கர வாகன உதிரி பாகங்களை திருடியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision