திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பாரத பிரதமர் நாளை மறுநாள் (02.01.2024) அன்று திருச்சிக்கு வருகை தருவதை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள் (லாரிகள்) (01.01.2024) இரவு 08:00 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம்,

மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும். பேருந்துகள் (02.01.2024) காலை 07:00 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

 திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் கட்சியினரின் வாகனங்கள் பாரத பிரதமரை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் (02.01.2024) காலை 09:00 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம்,

எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision