திருச்சி மாநகராட்சி வரி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி வரி அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள கோட்ட அலுவலகத்தில் சொத்துவரி குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் தீவிர வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

சொத்து வரி மற்றும் வரியில்லா இனங்களில் இரட்டை பதிவு (Double Entry) மற்றும் வரிவிதிப்பில் உள்ள குறைபாடுகள் களைய (11.02.2023) அன்று 5 கோட்ட அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது.

பிரதி மாதம் 2வது சனிக்கிழமைகளில் 5 கோட்ட அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறும். வரிவிதிப்பில் உள்ள தங்களுடைய குறைகளை முகாம் நாளில் தெரிவித்து சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பொது மக்கள் தங்களுடைய வரிகளை எளிதில் செலுத்த தினசரி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும், சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வரி வசூல் மையம் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn