எம்பி பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட நபரை தேடி வரும் திருச்சி மாவட்ட காவல்துறை

எம்பி பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட நபரை தேடி வரும் திருச்சி மாவட்ட காவல்துறை

திருச்சி மாவட்டம், ஆரோக்கியதாஸ் (வழக்கறிஞர்) என்பவர் கொடுத்த புகாரின்படி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தினைச் சேர்ந்த பிரவின்ராஜ் என்ற சங்கி பிரின்ஸ் என்பவர் SanghiPrince (@Sanghi Prince) என்ற X வலைதளப்பக்கத்தில் கடந்த (13.12.2023)-ஆம் தேதி #SecurityBranch happened in Loksabha you know why? Becuse of the irresponsible MPs like you were distributing 'Visitor passes via social media for publicity and without background verification. #ParliamentAttack don Take responsibility on this blame. @DrSenthil MDRD என்று

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய மக்களவை உறுப்பினரான டாக்டர் S.செந்தில்குமார் என்பவரை பற்றி அவரது புகைப்படத்தை போட்டு அதில் பிரவீன்ராஜ் என்பவர் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவிட்டதாகவும், அதை பார்த்து @Niranjan2428 என்ற X அக்கவுண்ட் கொண்ட நிரன்ஜன் குமார் என்பவர் மேற்படி கண்டித்து மறுபதிவிட்டுள்ளார் என்பதையும், மேற்படி பதிவுகளை புகார்தார் பார்த்ததாகவும், தற்போதைய மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில் குமார் என்பவருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு எதிரி பதிவிட்டுள்ளதாகவும்,

இந்த செய்தியானது அரசுக்கு எதிராகவும், உண்மைக்கு மாறாகவும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதியினை கெடுக்கும் நோக்கத்துடனும், உண்மைக்கு புறம்பான செய்தியினை சமூக வலைதளங்களில் பரப்பிய பிரவீன்ராஜ் மீது கொடுத்த புகார் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள எதிரியை திருச்சி மாவட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision