நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனங்களை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு

நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனங்களை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு

தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்படி தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் ரோந்து செய்து, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக பழைய ரோந்து வாகனங்களுக்கு பதிலாக கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் அதிநவீன வசதிகள் கொண்டு 14 ரோந்து வாகனங்கள் திருச்சி மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட்டது.

மேற்கண்ட வாகனங்களில் அதிநவீன கேமராக்கள், GPS, VHF Mike, PA System, Power Window, Air Conditioning, Beacon light, Rear Camera,  சிறப்பம்சங்கள் கொண்டதாக உள்ளது. மேற்கண்ட வசதிகள் கொண்ட அதிநவீன வசதிகளுடன் ரோந்து செய்தும், அனைத்து பகுதிகளுக்கும் விரைவாக சென்று குற்றச்சம்பங்கள் ஏதும் நடைபெற வண்ணம் குற்றத் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், அவசர எண்.100-க்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அழைப்புகளுக்கு சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று சட்டரீதியான துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிபாதுகாக்க ரோந்து வாகனங்கள் பெரிதும் துவை நிற்கின்றன. திருச்சி மாநகர காவல் எல்லைப்பகுதிகளை பிரதான சாலைகளில் ரோந்து மேற்கொள்ளும் வகையில் 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலம் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கொண்ட 14 அதிநவீன ரோந்து வாகனங்கள் மற்றும் 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை காவல் ஆணையர் ந.காமினி திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் நேரில் ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது ரோந்து வாகனங்களில் உள்ள வசதிகள் அனைத்தும் முறையாக பாராமரிக்கப்பட்டு வருகிறதா எனவும், ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு கருவிகளை பயன்படுத்தி குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசுகையில், "ரோந்துபகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி அருகில் புகையிலை பொருள்கள் விற்பனைசெய்யப்படுகிறதா என கண்காணிக்கவும், ரோந்து செய்யும்போது அப்பகுதியில்வசிக்கும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொண்டு பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு பாலமாகசெயல்பட வேண்டும் என்றும், குற்றம் நடைபெறமால் தடுக்கவும், பொதுமக்களின்பிரச்சனைகளை தீர்க்க துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும்அறிவுரைகள் வழங்கினார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆய்வின்போது, மாநகர காவல் கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை), நுண்ணிறிவுபிரிவு காவல் உதவி ஆணையர் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகனகாவல் ஆய்வாளர்  ஆகியோர்கள் உடனிந்தார்கள்."

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision