திருச்சி மாநகர போலீஸ் உயிரிழப்பு

திருச்சி மாநகர போலீஸ் உயிரிழப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த விநாயகமூர்த்தி (37). ஸ்ரீரங்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இருந்த பொழுது திடீரென மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காவலர் விநாயகமூர்த்தி பரிசோதனை செய்த போது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவலர் விநாயகமூர்த்தி மற்றவர்களிடம் சகஜமாக பழகக் கூடியவர் சில காலங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது 37 வயதே ஆன காவலர் திடீரென உயிரிழந்துள்ளது சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision