தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற திருச்சி ஆர்டிஓ

தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற திருச்சி ஆர்டிஓ

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கி வருகிறது. 

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக

திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு செய்தவர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது திருச்சியில் வழங்கப்பட்டது. இதில் திருச்சி லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது 2022 மற்றும் விருது தொகை ஒரு இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn