சபரிமலைக்கு மாலை அணிவித்து கொண்ட திருச்சி பக்தர்கள்!

சபரிமலைக்கு மாலை அணிவித்து கொண்ட திருச்சி பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் கடந்த 7 மாதங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக கோவில்கள், பூங்காக்கள் திறக்கப்படாத நிலையில் அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதம் வருவதால் வருடா வருடம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து செல்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து இந்த வருடம் கொரோனா நோய் தொற்று காரணமாக கோவிலுக்கு செல்ல முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு சபரிமலை நடை திறக்கப்பட்டது.

தற்போது திருச்சி கன்டோன்மென்ட் ஐயப்பன் கோவிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருச்சியில் இன்று பல கோவில்களில் பக்தர்கள் தங்கள் குருசாமி உதவியுடன் சபரிமலைக்கு மாலை அணிவித்தனர். கொரோனா காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே மாலை அணிவித்து வருகின்றனர்.

Advertisement