தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

நாளை (15.08.2023) 76 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார்.

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் விருதினை பெற உள்ளனர். சாலைகள் அமைப்பது, குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவது, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தமிழகத்திலேயே திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision