திருச்சி மாவட்டம் காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் 

திருச்சி மாவட்டம்  காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 14.02.2022 திருச்சி மாநகர காவல் துறையால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட, மாவட்ட ஆயுதப்படை வாகனபிரிவில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 17 இரண்டு சக்கர வாகனங்கள் (மொத்தம் - 25 காவல் வாகனங்கள்) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது .

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12 % மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 % சேர்த்து முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொண்டனர். இந்த ஏலம் திருச்சி மாநகர காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn