வைகுண்ட ஏகாதசி- திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

வைகுண்ட ஏகாதசி- திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 2ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு 02.01.2023 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இது பொருந்தும், ஆயினும் பள்ளி /கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகின்ற (07.01.2023) (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக செயல்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO